இளைப்பாற நிழலின்றி
நிற்கும் மரங்கள்
வெப்பம்
- கவிஞர் காமராஜ்
சான்றிதழில்
14
உணவு விடுதியில்
16
குழந்தைத் தொழிலாளி
- கவிஞர் தில் பாரதி
பாலித்தீன்
பயன்படுத்தாதீர்
கண்ணீர் கொட்டுகிறது
அருவி
- கவிஞர் சண்முகப்ரியன்
உருவம் பார்த்து
வராது
வெற்றியும்
தோல்வியும்
- கவிஞர் இந்துமதி
சாதி இரண்டொழிய
வேறில்லை
தெரிந்துக்
கொண்டேன்
சாதிவாரி கணக்கெடுப்பு
- கவிஞர் தகடூர் செவ்வியன்
பெளர்ணமியில்
இரட்டை ரோஜா
உன் உதடுகள்
- கவிஞர் கவி பெரியசாமி
தற்காலிக பூங்கா
குழந்தைகளுக்கு
திருவிழா பொம்மைக்
கடை
- கவிஞர் முருகேசன்
விரைவுப் பயணம்
அபாய சங்கு
பையில் செல்போன்
- கவிஞர் கவித்துளி குமார்
மாசற்ற உலகு
மடிந்து போகிறது
மரங்களின் இழப்பு
- கவிஞர் வேம்பை பாலாஜி
புள்ளிகள் இல்லை
கோலம் மட்டும்
மின்னல்
விரல்நுனி
வேகம் விவேகம்
குறுஞ்செய்தி
- கவிஞர் புதுவை பாலன்
No comments:
Post a Comment