Sunday 17 February 2013


இளைப்பாற நிழலின்றி
நிற்கும் மரங்கள்
வெப்பம்
-    கவிஞர் காமராஜ்

சான்றிதழில் 14
உணவு விடுதியில் 16
குழந்தைத் தொழிலாளி
-    கவிஞர் தில் பாரதி

பாலித்தீன் பயன்படுத்தாதீர்
கண்ணீர் கொட்டுகிறது
அருவி
-    கவிஞர் சண்முகப்ரியன்

உருவம் பார்த்து
வராது
வெற்றியும் தோல்வியும்
-    கவிஞர் இந்துமதி

சாதி இரண்டொழிய வேறில்லை
தெரிந்துக் கொண்டேன்
சாதிவாரி கணக்கெடுப்பு
-    கவிஞர் தகடூர் செவ்வியன்




பெளர்ணமியில்
இரட்டை ரோஜா
உன் உதடுகள்
-    கவிஞர் கவி பெரியசாமி

தற்காலிக பூங்கா
குழந்தைகளுக்கு
திருவிழா பொம்மைக் கடை
-    கவிஞர் முருகேசன்

விரைவுப் பயணம்
அபாய சங்கு
பையில் செல்போன்
-    கவிஞர் கவித்துளி குமார்

மாசற்ற உலகு
மடிந்து போகிறது
மரங்களின் இழப்பு
-    கவிஞர் வேம்பை பாலாஜி

புள்ளிகள் இல்லை
கோலம் மட்டும்
மின்னல்

விரல்நுனி
வேகம் விவேகம்
குறுஞ்செய்தி
-    கவிஞர் புதுவை பாலன்


No comments:

Post a Comment