Saturday 16 March 2013






கண் இருந்தும்
வெளிச்சம் இல்லை
கல்லாமை

-    கவிஞர் மாரிமுத்து

முத்தத்தில் தொடங்கி
முத்தத்தில் முடியும்
குழந்தை மொழி

-    கவிஞர் துளிர்

நவீனகால
மத்தாப்பு
கொசு மட்டை

-    கவிஞர் நியூட்டன்

எதுவும் முடியுமெனும்
உண்மையை உணர்தல்
சாதனை

-    கவிஞர் ஆனந்த ஜோதி

தள்ளாடும் இளமை
அவிழும் மானம்
மதுப்பழக்கம்

-    கவிஞர் கவித்துளி குமார்

ஒவ்வொரு வீட்டிலும்
கடவுளின் நடமாட்டம்
அம்மாக்கள்

-    கவிஞர் சுதாகர்

வாடும் மனதை
வருடும் சங்கீதம்
மழலை மொழி

-    கவிஞர் யாழினி

உலகின் துயர் களைய
உனை நீ பயிர்செய்
அன்பெனும் நிலத்தில்

-    கவிஞர் முனியசாமி


ஏறும் விலைவாசி
இறங்கும் சம்பளம்
பரமபத வாழ்க்கை

பள்ளிகளில் தொலைந்த
நீதி போதனையின் விளைவு
பற்றி எரிகிறது நாடு

-    கவிஞர் ஏகலைவன்

இருப்புக் கொள்ளவில்லை
பேருந்து இருக்கையில்
சில்லரை பாக்கி

-    கவிஞர் இளையராஜா


சாலையில் வேண்டாம்
மருத்துவமனையில் செய்யுங்கள்
ரத்த தானம்

-    கவிஞர் சந்திரன்

இதயங்களை
ஆட்டி வைக்கும்
இதமான சொற்கள்

-    கவிஞர் தவப்புதல்வன்

உடல் முழுதும் குறை
மனம் முழுதும் நம்பிக்கை
மாற்றுத்திறனாளி

-    கவிஞர் கவித்துளி குமார்

உலகமே வெறுத்தாலும்
உனக்கான ஆறுதல்
தன்னம்பிக்கை

-    கவிஞர் கிருஷ்ணன்


No comments:

Post a Comment